Wednesday, August 26, 2009




Bharathidasan - Biographical Profile in Tamil

பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் - ஈரோடு தமிழன்பன் நூலிலிருந்து...

பாரதிதாசன் ஒரு பார்வை - வைரமுத்து

பாவேந்தர் பற்றி அறிஞர்கள்

Bharathidasan Works



icai amutu - இசை அமுது tscii - pdf - and in unicode:

காதல் பகுதி

தமிழ்ப் பகுதி

பெண்கள் பகுதி

puratcik kavitaikaL mutaRt tokuti - புரட்சிக் கவிதைகள் - முதற் தொகுதி - 75 கவிதைகள் tscii - pdf and in unicode:

காவியம்

இயற்கை

காதல்

தமிழ்

பெண்ணுலகு

புதிய உலகம்

puratcik kavitaikaL iraNTAm tokuti - புரட்சிக் கவிதைகள் - இரண்டாம் தொகுதி - 66 கவிதைகள்

tscii - pdf - unicode

puratcik kavitaikaL mUnRAm tokuti tokuti - புரட்சிக் கவிதைகள் - மூன்றாம் தொகுதி - 8 கவிதைகள் tscii - pdf - unicode

azakin cirippu - அழகின் சிரிப்பு - tscii - pdf - unicode - tab

tamizacciyin katti - தமிழச்சியின் கத்தி

tscii - pdf - unicode

etirpArAta muttam -எதிர்பாராத முத்தம் - tscii - pdf - unicode

ilainjar ilakkiyam -இளைஞர் இலக்கியம் - tscii - pdf - tab - unicode

pANTiyan paricu - பாண்டியன் பரிசு - tscii - pdf - unicode

kAthal ninaivukal - காதல் நினைவுகள் tscii - pdf - unicode

kutumpa viLakku - குடும்ப விளக்கு - tscii - pdf - unicode

iruNTa viiTu - இருண்ட வீடு - tscii - pdf - unicode - tab

tamiziyakkam - தமிழியக்கம் - tscii - pdf - unicode

External Links



Bharathidasan Songs in Tamil at the Tamil Electronic Library

Bharathidasan

Paventhar Bharathidasan at Tamil Neri Association, Malaysia

Bharathidasan Songs -Pammal Sureshbabu

The Dramatic Voice of Bharatidasan "...Bharatidasan did not favour any compartmentalisation as prose, music and drama in Tamil literature. For him, the emotive centre of these genres remained an integral power containing all the three.."

Bharathidasan Memorial Museum, Pondicherry

Bharathidasan Museum & Songs

Bharathidasan at Wikipedia



Paventhar Bharathidasan - பாரதிதாசன்

29 April 1891- 1 April 1964





Virintha Vaane - Song by Bharathidasan, Sung by Nithya Sree Mahadevan, Scenes - Tamil Eelam



Professor C.R.Krishnamurthy



இன்பத் தமிழ்



தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!



தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்

தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!









--------------------------------------------------------------------------------



Kanaka Suppurathinam (கனக சுப்புரத்தினம்) (1891-1964), a native of Pondicherry (புதுச்சேரி) was an ardent follower of MahA Kavi SubramaNiya BharathiyAr's literary style and social policies. His high devotion to BhArathiyAr prompted him even to change his name to BhArathi DhAsan (பாரதிதாசன்), follower of BhArathi) to reflect his adoration of the great poet. Because of his revolutionary ideas regarding the eradication of religious superstitions and social discriminations and the use of pure Thamizh, he was referred to as Puratchik Kavignan (புரட்சிக்கவிஞர்). The following poem by n^Amakkal Kavignar rAmalingam (நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை) explains the literary policy of BhArathi DhAsan. "BhArathi DhAsan considered service to Thamizh as his mission in life; save the purity of his mother tongue; lead a virtuous life; change the idiosyncrasies arising from old traditions; and use new formats to convey revolutionary ideas."



தாய்மொழித் தொண்டே தவமெனத் தாங்கி

தாய்மொழிப் பண்பின் தனிமையைக் காக்கும்

வாய்மையே தன்னுடை வாழ்வின் உயிர்ப்பாய்

முதுமையிற் புகுந்துள முரண்களை மாற்றி

புதுமையிற் பாடும் புரட்சிக் கவிஞன்.



Elaborating further on his concept of new formats, BhArathi DhAsan explained his position as follows: "I am not against the great grammatical texts, TholkAppiam and n^annUl; While we should thank them for their guidance over the centuries, we would be doing a big disservice to these two great works if we do not come with new works to replace them; indeed it would be a blow dealt to our literary personalities."



ஒல்காத பெரும் புகழ்த்தொல்

காப்பியமும் நன்னூலும்

தமிழர்க் கெல்லாம்

நல்கரிய நன்மை யெலாம்

நல்கின என்ல் நாமும்

நன்றி சொல்வோம்

செல்பலநூற் ண்டு செல

அவ்விருநூல் திருவடியில்

புதிய நூற்கள்

பல்காவேல் இருநூற்கும்

பழியே, நம் புலவர்க்கும்

பழியே யனறோ?



Like so many other social reformers, BhArathi DhAsan desired that his society did not lag behind others in the march of progress. With this in mind he suggested that other aspects should be considered in the formulation of new literary policies.



"Let us translate all the books in all the disciplines in the whole world into Thamizh so that our youngsters do not depend on others for updating themselves; let us not divert the beauty of Thamizh only for religious teachings; let us have free libraries all over the place; we have wasted several generations talking about the glory and superiority of Thamizh but never bothered to remove our drawbacks."



உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்

ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்

சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிட வேண்டும்

தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்

இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்

எங்கள் தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித்

தலைமுறைகள் பலகழித்தோம் குறை களைந் தோமில்ல

தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்.



The similarities between BhArathi DhAsan and his peer, SubramaNiya BhArathi in their literary and social policies are striking as can be seen from the following poem. "We should write Thamizh books in a simple style so that everyone can understand; new grammar books have to be written; we have to coin new terminology for all the new developments taking place all over the world and use illustrations to explain them in the beautiful Thamizh language; if any Thamizh student is illiterate due to financial constraints, let us feel ashamed and do something about it."



எளியநடை யில்தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்

இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்

வெளியுலகில் சிந்தனையில் புதிது புதிதாக

விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாம் கண்டு

தெளிவு றுத்தும் படங்களோடு சுவடியெலாம் செய்து

செந்தமிழைச் செந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்

எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை என்ல்

இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.



The other issue on which BhArathi DhAsan stood firm is relevant today and pertains to the inability of many Thamizh people to speak or write Thamizh without mixing words from English or other languages. Along with MaRai Malai atikaL (மறைமலை அடிகள்) and SUrya n^ArAyaNa SAstrikaL (சூர்ய்நாராயணசாஸ்திரிகள் = பரிதிமால்கலைஞன்). BhArathi DhAsan was a strong proponent of the Pure Thamizh Movement (தனித் தமிழ் இயக்கம்). In the following poem he said:"We call our restaurants as clubs in English and cloth shops as 'silk shops' in English; in the streets of Thamizh n^Adu there is everything else except Thamizh".



உணவுதரு விடுதிதனைக்

கிளப்பென வேண்டும் போலும்

உயர்ந்த பட்டுத்

துணிக்கடைக்குச் சில்குஷாப்

எனும்பலகை தொங்குவதால்

சிறப்புப் போலும்

மணக்கவரும் தென்றலிலே

குளிரா இல்லை ? தோப்பில்

நிழலா இல்லை ?

தணிப்பரிதாம் துன்பமிது

தமிழகத்தின் தமிழ்த்தெருவில்

தமிழ்தான் இல்லை



Despite these persuasive appeals from distinguished authors of our own generation and the tremendous efforts of the government in fostering Thamizh language, it is indeed a paradox a) that several leading Thamizh magazines persist in the liberal use of English idioms, phrases and transliterations even in stories, anecdotes and essays and b) that in the audiovisual media people from all walks of life seem to take pride in alternating between Thamizh and English even in a pure Thamizh program.



Whether this pathetic situation has resulted from an inability or unwillingness of the elites to speak in our mother tongue or whether it is born out of a desire to express their proficiency in English and emulate other cultures in the name of modernism or whether it is the impact of the medium of instruction in the general educational system is a matter for serious consideration by everyone concerned.



At any rate the time and energy spent in coining new Thamizh equivalents for highly technical English words that are emerging almost on a daily basis are not likely to yield the desired solution. For this purpose transliteration would be more than sufficient. Students studying the technical subjects in Thamizh would be able to compete with others in the international arena. It would be better to spend these efforts in inculcating a sense of pride in our literary heritage in the minds of students, educationists, journalists and officials.



Along with so many social reformers of his time, BhArathi DhAsan was a revolutionary keen on introducing changes in the Thamizh language. He was also deeply concerned about the outmoded social traditions that needed to be eradicated. In the following poem he expressed his frustrations when young girls could not marry some one they love but had to marry according to the social customs and traditions. He cursed the society responsible for this pathetic situation.



மண்ணாய்ப் போக , மண்ணாய்ப் போக

மனம்பொருந்தா மணம் மண்ணாய்ப் போக

சமுகச் சட்டமே, சமுக வழக்கமே

நீங்கள் மக்கள் அனைவரும்

ஏங்காதிருக்க மண்ணாய்ப் போகவே.





--------------------------------------------------------------------------------



Bharathidasan - Biographic Profile

பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கைக் குறிப்புகள்





( நன்றி: புரட்சிப் பாவலரின் "சிரிக்கும் சிந்தனைகள்" நூலிலிருந்து)



1891 - ஏப்ரல் 29, அறிவன் (புதன்) இரவு பத்தேகால் மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை. தாய் இலக்குமி. உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.



1895 - ஆசிரியர் திருப்புளிச்சாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி. இளம் அகவையிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது புதுவை.



1908 - புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கணஇலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். புலவர் சுப்புரத்தினத்தை வேணு "வல்லூறு" வீட்டுத் திருமணத்தில் பாரதியார் காணும் பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வு எடையில் நின்றார். வென்றார். நட்பு முற்றியது. பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத்தினத்தைப் பற்றியது.



1909 - கல்வி அதிகாரியார் உதவியால் காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றல்.



1910 - வ.உ.சி.யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர் - பாரதியார், வ.வே.சு., பர்.வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தல். தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல் துண்டில் வடித்த சோறு கொடுத்தல். ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தருதல். காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவல். பாரதியாரின் "இந்தியா" ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல். ஆசு ஆட்சித் தலைவரைச் (கலெக்டரைச்) சுட்ட துமுக்கி (துப்பாக்கி) பாவேந்தர் அனுப்பியதே.



1916 - தந்தையார் (23.1.1916) இயற்கை எய்தல்.



1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.



1919 - திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில், பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல்.



1920 - இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல், புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனி அம்மையை மணத்தல். தம் தோளில் கதர்த் துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றல்.



1921 - செப்டம்பர் 19 - தலைமகள் சரசுவதி பிறப்பு (12.11.1921) பாரதியார் மறைவு.



1922 - கே.சு. பாரதிதாசன் என்ற புனைப்பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன் "துய்ப்ளேச்சு", புதுவை கலைமகள், தேசோபகாரி, தேச பக்தன், ஆனந்த போதினி, சுதேச மித்திரன் இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதுதல்.



1924 - சோவியத்து நாட்டு மாவீரர் இலெனின் இழப்பிற்குப் பாடல்.



1926 - சிரி மயிலம் சுப்பிரமணியர் துதியமுது. நூலில் சிந்தைக்குத் தந்தையாதல்.



1928, நவம்பர் 3 - கோபதி (மன்னர் மன்னன்) பிறப்பு. தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ.இரா.வுடன் இணைதல். தாமும் தம் குடும்பமும் பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல். குடும்பத் திருமணங்களில் தாலியைத் தவிர்த்தல்.



1929 - குடி அரசு, பகுத்தறிவு ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை, கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன்முதல் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புச் பெறல்.



1930 - பாரதி புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர், சிறுமியர் தேசியப் பாடல், தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை ம.நோயேல் வெளியிடல். திசம்பர் 10இல் புதுவை முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.



1931 - புதுவை முரசு (5.1.31) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை - கட்டுரை வரைதல். சுயமரியாதைச் சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலை "கிண்டற்காரன்" என்ற பெயரில் வெளியிடல். (குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படைப்பு) 18.8.31 இரண்டாம் மகள் வசந்தா (வேனில்) பிறப்பு. பள்ளி ஆண்டு விழாவில் சிந்தாமணி என்ற முத்தமிழ் நாடகம் எழுதி இயக்குதல்..



1932 - "வாரிவயலார் வரலாறு" அல்லது "கெடுவான் கேடு நினைப்பான்" புதினம் வெளியிடல். வெளியார் நாடகங்களுக்கும் தன்மான, பொதுவுடைமைக் கூட்டங்களுக்கும் பாட்டெழுதித் தருதல்.



1933 - ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை ஒயிட்சு நினைவுக் கட்டிடத்தில் (31.2.1933) நடந்த நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்டு வருகைப் பதிவேட்டில் நான் ஒரு நிலையான நாத்திகன் என்று எழுதி கையெழுத்திடல்.



1933 - மூன்றாம் மகள் இரமணி பிறப்பு.



1934 - மாமல்லபுரத்திற்கு முழுநிலா இரவில் தோழர் ப.சீவானந்தம், குருசாமி, குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம், மயிலை சீனி.வேங்கடசாமி, மாயூரம் நடராசன், சாமி சிதம்பரனார், எசு.வி. லிங்கம், நாரண துரைக்கண்ணனுடன் படகில் செல்லல். மாவலிபுரச் செலவு - பாடல் பிறந்தது. 9.9.1934இல் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் பெரியார் தலைமையில் நடைபெறல்.



(குருசாமி -இரணியன், திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியன் - பிரகலாதன்)



1935 -இந்தியாவின் முதல் பாட்டேடான, "சிரி" சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் தொடக்கம். இதற்கு ஊறுதுணையாக இருந்தவர் எசு.ஆர். சுப்பிரமணியம். (சர்வோதயத் தலைவர்)



1936 - பெங்களூரில் பதினான்கு நாள் தங்கி (1.4.1936) தேசிங்கு ராசன் வரலாற்றை "அட்கின்சு" குழுமத்தார்க்கு "இசு மாசுடர் வாய்சு" இசைத் தட்டுகளில் பதித்தல்.



1937 -இல் புரச்சிக்கவி -குறுப்பாவியம் வெளியிடல். பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இதில் நடித்தவர்கள் டி.கே.சண்முகம்-உடன் பிறந்தோர் அனைவரும்.



1938 -"பாரதிதாசன் கவிதைகள்" முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். பொருளுதவி செய்தவர் கடலூர் தி.கி. நாராயனசாமி. தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கியதால், பெரியார். "தன்மான இயக்கத்தின் பெரும் பாவலர்" என்று பாராட்டினார். மருத்துவர் மாசிலாமணியார் நடத்திய தமிழரசு இதழில் தொடர்ந்து எழுதுதல். "தமிழுக்கு அமுதென்று பேர்" என்ற பாடலை அச்சுக் கோத்தவர் பின்னாளில் சிறப்புற்ற எழுத்தாளர் "விந்தன்".



1939 -"கவி காளமேகம்" திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூல் வடிவில் வருதல்.



1941 -"எதிர்பாராத முத்தம்" பாவியம் காஞ்சி பொன்னப்பாவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல். இதற்கு மேலட்டை ஓவியம் இராய் சவுத்ரி.



1942 - குடும்ப விளக்கு 1 வெளியிடல். இந்தியப் போராட்ட எழுச்சியை மறைமுகமாக ஊக்குவித்தல். இரண்டாம் உலகப் போரை -இட்லரை எதிர்த்தல். பல ஏடுகட்கும் எழுதுதல்.



1943 - பாண்டியன் பரிசு-பாவியம் வெளியிடல்.



1944 - பொரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். "இன்ப இரவு" (புரட்சிக்கவி) முத்தமிழ் நிகழ்ச்சி அரங்கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல நீர்ப்பு (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன் பின் வெளியிடல். சதி சுலோசனா என்ற திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். குடும்ப விளக்கு 2 வெளியிடல். செட்டிநாடு முழுவதும் இலக்கியச் சொற்பொழிவு நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல். கலைவாணர் என்.எசு.கே. வுக்காக "எதிர்பாராத முத்தம்" நாடகமாத் தீட்டித் தருதல். "கற்கண்டு" பொறுமை கடலினும் பெரிது இணைத்து எள்ளல் நூல் வெளியிடல்.



1945 - புதுவை 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்குதல். தமிழியக்கம், (ஒரே இரவில் எழுதியது) எது இசை நூல்கள் வெளியிடல்.



1946 - முல்லை இதழ் தொடங்கப்பட்டது. அமைதி, ஊமை நாடகம் வெளியிடல். 29.7.1946 - பாவேந்தர் "புரட்சிக் கவி" என்று போற்றப்பட்டு ரூ.25 ஆயிரம் கொண்ட பொற்கிழியை, நாவலர் சோமசுந்தரம் பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தி அறிஞர் அண்ணா திரட்டித் தந்தார். தமிழகப் பேரறிஞர்கள் அனைவரும் வாழ்த்திப் பேசினர். 8.11.1946இல் முப்பத்தேழாண்டுத் தமிழாசிரியர் பணிக்குப் பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல்.



1947 - புதுக்கோட்டையிலிருந்து "குயில்" 12 மாத வெயியீடு. சவுமியன் நாடக நூல், பாரதிதாசன் ஆத்திச்சூடி வெளியிடுதல். சென்னையில் குயில் இதழ். ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி - திரைப்படக் கதை, உரையாடல், பாட்டு தீட்டல். இசையமுது வெளியிடல். புதுவையிலிருந்து "குயில்" ஆசிரியர் - வெளியிடுபவர் - "கவிஞர் பேசுகிறார்" சொற்பொழிவு நூல்.



1948 - காதலா? கடமையா? பாவியம் முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்), கடற்மேற் குமிழிகள் பாவியம். குடும்ப விளக்கு 3, திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட கரடி - நூல் வெளியிடல். குயில் மாத ஏட்டிற்குத் தடை, நாளேடாக்குதல், கருஞ்சிறுத்தை உருவாதல்.



1949 - பாரதிதாசன் கவிதைகள், 2-ஆம் தொகுதி சேர தாண்டவம், முத்தமிழ், நாடகம், தமிழச்சியின் கத்தி - பாவியம், ஏற்றப் பாட்டு வெளியிடல்.



1950 - குடும்ப விளக்கு 4, குடும்ப விளக்கு 5 வெளியிடல்.



1951, செப்டம்பர் 15இல் வேனில் (வசந்தா தண்டபாணி) திருமணம். அ. பொன்னம்பலனார் தலைமையில் நடந்தது. அமிழ்து எது? கழைக் கூத்தியின் காதல் வெளியிடல்.



அறுபதாண்டு மணிவிழா திருச்சியில் நிகழ்வுறல்.



1952 - வளையாபதி - திரைப்படம், கதை, உரையாடல், பாட்டு, இசையமுது இரண்டாம் தொகுதி வெளியிடல்.



1954 - பொங்கல் வாழ்த்துக் குவியல், கவிஞர் பேசுகிறார் - சொற்பொழிவு நூல் வெளிவரல். குளித்தலையில் ஆட்சி மொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல்.



1954 - மூன்றாம் மகள் இரமணி சிவசுப்பிரமணியம் திருமணம். இராசாக் கண்ணனார் தலைமையில் நடந்தது.



1955 - புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். சூன் 26இல் மன்னர் மன்னன் - மைசூர் வீ. சாவித்திரி திருமணம். கோவை அ. ஐயாமுத்து தலைமை. பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி வெளியிடல்.



1956 - தேனருவி இசைப்பாடல்கள் வெளியிடல்.



1958 - தாயின் மேல் ஆணை, இளைஞர் இலக்கியம் வெளியிடல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல். குயில் - கிழமை ஏடாக வெளிவருதல்.



1959 - பாரதிதாசன் நாடகங்கள், குறிஞ்சித் திட்டு பாவியம் வெளியிடல். பிசிராந்தையர் - முத்தமிழ் நாடகம் தொடர்தல். 1.11.1959 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல்.



1961 - சென்னைக்குக் குடி பெயர்தல். "பாண்டியன் பரிசு" திரைப்படம் எடுக்க திட்டமிடல். செக் நாட்டு அறிஞர் பேராசிரியர் கமில்சுவலபில் "செக்" மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல். நடுவர் எசு. மகராசன் நட்புறவு.



1962 - சென்னையில் மீண்டும் குயில் கிழமை ஏடு (15.4.1962). அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம். கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா - வெளியிடல். தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இராசாசி பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல்.



1963 - தோழர் ப.சீவானந்தம் மறைவு குறித்துப் "புகழ் உடம்பிற்குப் புகழ் மாலை" பாடல் எழுதுதல். சீனப்படையெடுப்பை எதிர்த்து அனைத்திந்திய மக்களை வீறுகொண்டெழுப் பாடல்கள் எழுதுதல். பன்மணித்திரள் நூல் வெளியீடு. 1972-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வழக்கறிஞர் வி.பி. இராமன் தலைமையில் நடைபெற்றது.



"பாரதியார் வரலாறு" திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு எழுதி முடித்தல். இராசிபுரத்தில் புலவர் அரங்கசாமி கூட்டிய கவிஞர்கள் மாநாட்டில் தலைமை ஏற்றல்.



1964 - பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. சென்னை, சென்னை பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21இல் இயற்கை எய்தல். மறுநாள் புதுவைக் கடற்கரையில் உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72ஆண்டு 11 மாதம் 28 நாள்.



1965, ஏப்ரல் 21 - புதுவை கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம் புதுவை நகராட்சியினரால் எழுப்பப்பட்டது.



1968 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெறல்.



1970, சனவரி - இரமணி மறைவு.



1971, ஏப்ரல் 29 - பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு, 95ஆம் எண் கொண்ட இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிப் பாவலர் நினைவு நூலகம், காட்சிக் கூடம் நடந்து வருகிறது.



1972, ஏப்ரல் 29 - பாவேந்தரின் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.



1979 - கடற்மேற் குமிழிகள் - பாவியத்தின் பிரஞ்சு மொழியாக்கம் வெளியிடப் பெறல்.





--------------------------------------------------------------------------------



பாரதிதாசன் ஒரு பார்வை - வைரமுத்து



கவிஞன்

உருவாக்கப்படுவதில்லை!

காரணம்....

அவன்

களிமண் பொம்மையில்லை!



கவிஞன்

பிறப்பதுமில்லை!

ஏனெனில்,

எந்தக் கருப்பையும்

அவனை

அசுத்தப்படுத்திவிட முடியாது!



அவன்

தோன்றுகிறான்!

தன்னிலிருந்து இன்னொன்றாய்

தானே தோன்றுகிறான்!



நிகழ்காலத்தின்

பாய்விரிப்பில் படுத்துக்கொண்டே

நேற்றுகளிலும்.... நாளைகளிலும்

வாசம்புரிய வல்லவன் அவனே!



அவன் கனவுகள்

தூக்கங்களால் மட்டும்

கெளரவிக்கப்படுவதில்லை!

அவன் கனவுகளுக்கு

விழிப்புகளும் சம்மதிக்கின்றன!



இந்தப்

பிரபஞ்சத்தின் நுரையீரல்களுக்காவே

அவன்

தன்

சொந்த மூக்கில் சுவாசிக்கிறான்!



அவனால் மட்டுமே

உலகின்

எல்லா மொழிகளையும் ஒரே லிபியில் எழுத முடியும்.



அவன் சிரிப்பான்;

சூரியனிலும்

ஈரங் கசியும்!



அவன் அழுவான்

பகலே

இருட்டை அணிந்து

அவனோடு

துக்கங் கொண்டாடு:ம!



அவன் கோபிப்பான்!

அவன்



விரல்களில் சூட்டில்

பேனா மை கொதிக்கும்!



அவன் நிழ:ல

வெயிலுக்கும்

குடையாகும்.



பாரதியின் தாசனே!

நீயும்

இந்தப்

பட்டியலின் பாற்பட்ட

பாவலன் தான்!



நீ

எதைப்பற்றித்தான்

எழுதவில்லை?



பூமியின் தோள்களில்

வெய்யில் தூரிகையால்

தொய்யில் எழுதுமே

விடிகாலை

அதைப்பற்றி



வெப்பப் பகலை வீழ்த்திய

ஒரு

புரட்சிக்குப் பிறகு....

உறைந்த ரத்தக்ளமாய்க்

குளிர்ந்து கிடக்குமே

அந்தி....

அதைப்பற்றி



காற்றுவாங்க வருவோர்க்கு

அலைச் சாமரங்கள் வீசுமே

கடல்...

அதைப்பற்றி



ஓ! எதைப்பற்றித்தான்

நீ எழுதவில்லை!

உன்னை...

சராசரித் தராசுகள்

நிறுத்திவிட முடியாது!

விமர்சனத் தராசின்

போலிக் கயிறுகளை

அறுத்துவிடும் கனம்

உன் கவிதைக்குண்டு!



நீ கண்டித்தாய்!

சுரங்களைக் சுரக்கும்

காதல் வீணைகள்

விறகுக்காகவே

வெட்டப்படுவதை



நீ எதிர்த்தாய்!

கோவலர்கள் செத்ததற்காய்

கண்ணகிகளையே எரித்துவிடும்

கண்மூடித்தனத்தை



சமூகம்

ஒரு

விதவைக் கூந்தலின்

பூக்களை மட்டுமே

புறக்கணிக்க முடியும்!

அவள் கண்ணிலிருந்து

இதயத்திற்குள் சொட்டும்

கண்ணீருக்கு யார்

காவல் நிற்க முடியும்?



சமுதாயம்

அவளைச் சுத்தப்படுத்துவதாய்த்

தன்னை

அழுக்குப்படுத்திக கொள்கிறது.



விதவைகளின்

அமாவாசை நெற்றிகளில் திலக நிலவுகள் தீட்டிய புலவன்

நீயல்லவா!



உலகச் சந்தையில்

காணாமல் போன

கைக் குழந்தைகளாய்

நாம்

தவித்தழுத போது

முகவரிதர மு;னிவந்தவன்

நீயல்லவா?



தமிழின்

சாசனமாயிருந்த

சங்கப் பலகை

பூசணம் பிடித்த பொழுது

அந்தப் பலகையைச்

சொந்த ஊஞ்சலாய் ஜோடித்து

உல்லாசத் தமிழ்மகளை

உட்கார்த்திப் பார்த்வன் நீயல்லவா?



உன்னை நான் நேசிக்கிறேன்

ஒரு

தாமரைப் பூவில்....

பரணன்முதல் பாரதிவரை

பெண்ணின்

கன்னச் சிவப்பையே காண்கையில்

உழைக்குந் தோழரின்

கைகளில் சிவப்பைக்

கண்டவன் நீ என்பதால்...

உன்னை நான் நேசிக்கிறேன்.



--------------------------------------------------------------------------------



பாவேந்தர் பற்றி அறிஞர்கள்



தந்தை பெரியார் 1938

சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி



"பாரதிதாசன் கவிதைகள்" என்னும் புத்தகம் தமிழ் நாட்டுக்கு ஒரு சிறந்த பொக்கிஷமாகும். இது, படிப்போருக்குக் கவியா? வசனமா? என்று மலைக்கும் படியான ஓர் அற்புதக் கவித்திரட்டு என்றுதான் சொல்ல வேண்டும்.



கவிதைகள் அமைப்புப் பெருமை இங்ஙனம் இருக்க, கவிகள் கொண்ட கருத்துக்களோ முற்றிலும் சமூக சமயச் சீர்திருத்தக் கருத்துக்களேயாகும். சிறப்பாக மூட நம்பிக்கைகளை அகற்றும் தன்மையில், மிகமிகப் பாமர மக்களுக்கும் பசுமரத்தில் ஆணி அறைந்தது போல் விளங்கும்படியும் பதியும்படியும் பாடப்பட்டிருப்பதுடன், கவி நயமோ புலவர்களுக்கு ஒரு நல் விருந்தாகவும் அமைந்துள்ள அரும் புத்தகமாகும்.



தோழர் பாரதிதாசன் அவர்கள் தமிழ்நாட்டிற்குப் புதியவரல்ல. அவர் சென்ற பத்து ஆண்டுகளாகச் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றார். மனித சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் சந்தோஷ வாழ்க்கைக்கும் இன்றியமையாத புரட்சியான பல சீ¡திருத்தங்களை ஆதரிப்பது மட்டுமின்றி, அவைகளை ஜன சமூகத்தில் பலவழிகளிலும் பரப்ப வேண்டுமென்ற ஆசையைக் கொண்டவர். சிறப்பாகவும், சுருக்கமாகவும் கூற வேண்டுமானால் பாரதிதாசன் அவர்கள் "சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி" என்றுதான் வற வேண்டும்.



இந்த ஒரு காரணத்தினாலேயே, அவர் இன்று தமிழ் நாட்டின் சிறந்த கவியாய் இருந்தும், அவருடைய புகழ் போதுமான வரையில் பரவாமலிருக்கிறது. ஆனால் அவர் மட்டும் வெறும் புகழை விரும்புவாரானால், காலத்திற்கும் பாமர மக்கள் உணர்ச்சிக்கும் ஏற்றவாறு தம் கருத்துக்களை மாற்றிக் கொண்டு மிகச் சிறந்த கவி என்ற பெயரை எளிதில் பெற்று விடலாம்.



ஆனால், உண்மை, நியாயம், அறிவு முதலியவற்றைச் சிறிதும் விட்டுக் கொடுக்க இசையாத இயற்கையான ஒரு பிடிவாதமுடையவராதலால் அவர் புகழை எதிர்பாராமல், தம் கொள்கைகளில் விடாப்பிடியாய் இருந்து வருகிறார். இக்குணத்தை நான் அவரிடம் பல தடவைகளில் கண்டிருக்கிறேன்.



இத்தகைய ஒருவரால் எழுதப்பட்ட இப்புத்தகத்தை உண்மைத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் சிறப்பாகச் சமூகப் புரட்சிக் கருத்துடையவர்களும், சமூகச் சீர்திருத்தத் தொண்டு செய்பவர்களும் வாங்கி அனுபவித்து அதன் கருத்துக்களை மக்களிடையில் பரப்ப வேண்டியது மிக்க அவசியமாகும்.



இப்பாட்டுக்களைப் பாடிய தோழர் பாரதிதாசன் அவர்களுக்கும் இவைகளைத் திரட்டி வெளியாக்கிய தோழர் குஞ்சிதம் குருசாமி அவர்களுக்கும் சீர்திருத்த உலகம் கடப்பாடுடையதாகும்.





--------------------------------------------------------------------------------



பேரறிஞர் அண்ணா

வீரராகத் திகழ.....தழிழராக வாழ....!



"முகிலைக் கிழித்து வெளிக் கிளம்பும் ஒரு முழுமதி போல".... தமிழ்நாட்டில் தோழர் பாரதிதாசனின் கவிதை தேன்றியுள்ளது. புரட்சிக் கருத்துகள் அவரது உள்ளத்தில் பொங்கிப் பூரித்து, புதுமைக் கவிதைகளாக வெளிவருகின்றன. இயற்கையின் எழில், காதல், மேம்பாடு, கலை நுணுக்கம் முதலியனபற்றி அவர் இயற்றியுள்ள கவிதைகள் படிப்போரைக் களிப்புக் கடலில் ஆழ்த்தும். ஆனால், புத்துலகக்கரை கொண்டு போய்ச் சேர்க்கும். வீரச் சமுதாயம், "கடவுள்", "மதம்", என்னும் கட்டறுத்து காதல், கவிதை, கலை எனும் நறுமணச் சோலையில் உலவும் நல்ல சமுதாயம், "ஓடப்பர்" இல்லது "ஒப்பப்பர்" உள்ள சமுதாயம், வஞ்சகத்தை வீழ்த்த வாளெடுக்கத் துணியும் தீரச் சமூகம் - இது கவியின் இலட்சியம். இது பலப்பல பரிமளத்துடன் பாக்களாக வந்துள்ளன. ஒவ்வொன்றும் உள்ளத்துக்கு உல்லாசமும், உறுதியும் தருவன. முத்தும், பவளமும், வைரமும் தங்கப் பேழையில் இட்டுத் தருவதுபோல் பாரதிதாசனின் கவிதைகளைத் திரட்டி அழகிய வடியினதாக, சென்னை "தமிழ் நூல் நிலையத்தார்" வெளியிட்டுள்ளனர். இளைஞர்கள் ஒவ்வொருவரும் இதனைப் பெற வேண்டும். பேறு பெற அல்ல. புத்துலகக் கருத்து பெற, புதுமைச் சுவையை உண்ண, வீரராகத் திகழ! தமிழராக வாழ!





--------------------------------------------------------------------------------



மறைமலையடிகள்

பாச்சுவை பாரதிதாசன் வாழ்க



திருச்சியில் ஒரு மணி விழா நடைபெற்று வருகிறது. அது தமிழ் விழா. தமிழ்நாட்டு விழா. தமிழ்ப் பாட்டு விழா. அவ்விழாவை, இயல் வாழ்த்துகிறது; இசை வாழ்த்துகிறது; நாடகம் வாழ்த்துகிறது.



மணி விழாவுடையார் யார்? புதுவைத் தோன்றல் சுப்புரத்தினம் - பாரதிதாசன்; அவர் வாழ்க!



கடவுள் பாட்டு, கருணை பாட்டு, நிலை பாட்டு, வெண் வீதி பாட்டு, ஞாயிறு பாட்டு, திங்கள் பாட்டு, நானிலம் பாட்டு, எல்லாம் பாட்டு - பாட்டே!



எல்லாவற்றையும் பாட்டாக நோக்கும் நெஞ்சில் பாட்டு முகிழ்க்கும். அதனை எழுத்தோவியமாக அமைக்கும் பேறு பலர்க்கு வாய்ப்பதில்லை. தோழர் பாரதிதாசனுக்கு அப்பேறு எளிதில் வாய்த்தது. இது கருவிலுற்ற திருவேயாகும்.



தோழருடன் சிறிது நேரம் பேசினும் அவர்தம் குழந்தை மனம் புலனாகும். குழந்தை மனம் பாட்டுப் புலம் என்பதை விளக்க வேண்டுவதில்லை.



புதுவைத் தமிழ் வகுப்பு கனகசுப்புவினிடத்திருந்து பொங்கி வழிந்த பாமணிகள் பலப்பல. அவற்றுள், கருத்து வேற்றுமை உண்டு. வேற்றுமை என் நெஞ்சைக் கவர்வதில்லை. பாட்டே என் நெஞ்சசைக் கவரும். இது சுப்புவின் பாட்டுத் திறம் என்று கூறாது வேறென்ன கூறுவது.



பொதுவைப் பொழில் - புதுமை மலர் - தமிழ்த்தேன் - பாச்சுவை - பாரதிதாசன் வாழ்க! வாழ்க! வாழ்க பல்லாண்டு!

தமிழ்த்தென்றல் திரு வி.க.



".....இக்காலத்திற் பல துறைகளிலுஞ் சீர்திருத்தம் வேண்டி நிற்கும், நம் தமிழ் மக்கட்குப் புது முறையிற் பாடப்பட்டிருக்கும் பாரதிதாசனின் பாட்டுகள் கிளர்ச்சியினையும் மகிழ்ச்சியினையும் பயந்து, சீர்திருத்தங்கள் பலவற்றிற்கு வழி காட்டும்.






Sunday, August 02, 2009

புதுக்கோட்டை

The Wikimedia Board of Trustees election has started. Please vote.
[ஒளி]
[மொழிபெயர்க்க உங்களது உதவி தேவை!]
தமிழ் விக்கிமேற்கோள், தமிழ் விக்கிசெய்திகள் திட்டங்கள் தொடர வாக்களியுங்கள்.

புதுப் பயனர்களுக்கான உதவி | தமிழ்த் தட்டச்சு உதவி | Tamil font help | தமிழ் அகரமுதலி

புதுக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புதுக்கோட்டை

புதுக்கோட்டை
அமைவிடம் 10.38° N 78.82° E
பரப்பளவு {{{பரப்பளவு}}} கிமீ²
கால வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
மக்கள் தொகை
- மக்களடர்த்தி
108,947
-


புதுக்கோட்டை (ஆங்கிலம்:Pudukkottai), இந்திய மாநிலமான தமிழ் நாட்டிலுள்ள ஒரு நகரம் ஆகும். புதுக்கோட்டை 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் நாள் மாவட்டமாக மலர்ந்தது. இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது. தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு(சமஸ்தானம்) 3.3.1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாறு, குண்டாறு, பாம்பாறு, அஞ்ஞான விமோச்சனியாறு, உய்யங்கொண்டான், அம்புலியாறு, கோரையாறு, சூறையாறு முதலிய காட்டாறுகள் ஓடுகின்றன. பெரும் மழைக்காலங்களில் மாடுமே இவற்றில் தண்ணீர் ஓடும். மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள கருங்கல் குன்றுகள் 'மலைகள்' என்று அழைக்கப்படுகின்றன. பல ஊர்கள் மலை என்ற அடைமொழியுடன் விளங்குகின்றன - குடுமியான்மலை, நார்த்தாமலை, விராலிமலை, தேனிமலை, பிரான்மலை இந்த குன்றுகளில் தாவரவளம் மிகவும் குறைவு. மாவட்டத்தில் மிக உயரமான குன்று பிரான்மலையில் உள்ளதாகும்.

நார்த்தாமலையில் பரந்து காணப்படும் குன்றுகளில் நல்ல வகைக் கருங்கல் கிடைக்கிறது. செவலூர், அம்மா சமுத்திரம், குன்னத்தூர் மலை, செம்பாட்டூர், விராலிமலை, நெடுங்குடி, குடுமியான்மலை, திருக்கோகர்ணம், வையாபுரி, குமரமலை, குன்னாண்டார்கோவில், மலையடிப்பட்டி, அரிமளம், திருமயம், சித்தன்னவாசல் ஆகிய இடங்களிலும் சிறிய கருங்கல் குன்றுகள் உள்ளன. நார்த்தாமலையில் உள்ள சிறு குன்றுகளில் பலவகையான மூலிகைச் செடிகள் காணப்படுகின்றன.

பொருளடக்கம்

[மறை]

[தொகு] வரலாற்றுக்கு முற்பட்டக் காலம்

ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.

இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள், அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை போகட்டும் என்றூ கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம். இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது.

"மாயிறும் தாழி கவிப்பத் தாவின்று கழிக வெற்கொல்லாக் கூற்றே" என நற்றிணையும்(271)

"மன்னர் மறைத்த தாழி வன்னி மரத்து விளங்கிய காடே" எனப் பதிற்றுப்பத்தும்(44)

"கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் தேவர் உலகம் எய்தினன் ஆதலின் அன்னோற் கவிக்கும் கண் அகந்தாழி" எனப் புறநானூறும்(228) கூறுவதைக் காணலாம்.

"சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர் தாழ்வயினடைப்போர் தாழியிற் கவிப்போர்" (6-11-66-67) என்று மணிமேகலை ஐந்து வகை ஈம முறைகளைக் குறிக்கிறது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகாள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலக்கட்டங்களில் நாகரீகம் படிப்படியாக உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலக்கட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன.

[தொகு] பிராமிக் கல்வெட்டு

பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) சுமார் கி.மு 200 முதல் கி.பி 200 வரை வழக்கிலிருந்ததாக கல்வெட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்மொழியை எழுதுவதற்கு பாமர மக்களிடம் இவ்வெழுத்துப் பரவலாக வழக்கத்திலிருந்து இக்கல்வெட்டுகளில் தூய தமிழ்ச் சொற்களும், பிராகிருத மொழிச் சொற்கள் சிலவும் காணப்படுகின்றன. சித்தன்னவாசல் ஏழடிப்பட்டம் என்னும் குகையில் பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கல்வெட்டு குகையின் தரையில் காணப்படும் வழவழப்பான ஒரு படுக்கையின் விளிம்பில் பொறிக்கபபட்டுள்ளது.

"எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்"

என்ற இக்கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அதாவது எருமையூர் நாட்டில் குழுழூர் என்னும் ஊரில் பிறந்த கவுடிகன் என்னும் முனிவருக்கு சிறுபாவில்(அக்காலத்தில் சித்தன்னவாசல் சித்துப்போரில் என அழைக்கப்பட்டது என்றும் இதுவே பின்னர் சிறுபாவில் என மறுவியது).

சமணமதம் அக்காலத்திலிருந்தே புதுக்கோட்டைப் பகுதியில் தழைத்தோங்கி இருந்ததற்கான சான்றுகள் இதன் மூலம் தெரியவருகிறது. இக்காலத்திற்கும் பிற்காலத்திலும் எடுக்கப்பட்ட பல சமண சின்னங்களும் சிற்பங்களும் இடிந்து போன சமணப்பள்ளிகளும் இங்கு நிறையக் காணப்படுகின்றன.

[தொகு] சங்ககாலம்

சங்ககால இலக்கியங்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல ஊர்ப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் சர்ச்சைக்குறியதென்றாலும், இவை குறிப்பிடும் வரலாறு கி.பி முதல் மூன்று நூற்றாண்டுக்குரியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும் இந்த இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த மாவட்டத்தின் கோர்வையான் வரலாறைத் தொகுப்பது கடினம் எனினும் சங்க காலத்தில் சிறப்பு பெற்றிருந்த பகுதிகளில் ஒன்றாகப் புதுக்கோட்டை திகழ்ந்தது என்பது விளங்கும்.

"தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமில் பன்னிரு நாடென்"

என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்குசோழர் காலக்கல்வெட்டு இதனன உறுதிப்படுத்துகிறது. தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச்

பன்றிநாடானது கோனாடு, கானாடு ன இரு பெரும் பிரிவுகளாக விளங்கியத். இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தத். வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்று, தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் வழங்கியது. தென்கோனாட்டில் ஒல்லையூர் கூற்றம் அமைந்திருந்தது. ஒல்லையூரை வெற்றிகொண்ட ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் சிறப்பு புறநானூறு 71வது பாடலில் கூறப்படுகிறது. அகநானூற்றில் 25வது பாடல் இவன் பாடியதாகும். இவனது மனைவி பெருங்கோப்பெண்டு சிறந்த கற்பினள். பாண்டியன் இறந்த பிறகு இவள் தீயில் விழுந்து மாண்டாள். புறநானூறு 246, 247வது பாடல் இவள் பாடியதாகும்.

சங்க காலத்தில் நடந்துவந்த கடல்கடந்த வாணிபத்தில் புதுக்கோட்டைப் பகுதி வணிகர்களும் ஈடுபட்டிருந்தனர். மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரை பட்டிணங்களுக்கு ஏற்றுமதிப் பொருட்கள் புதுக்கோட்டைப் பகுதி வழியாகக் கொண்டு செல்லப்பட்டன என்றூ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

[தொகு] புதுக்கோட்டையில் ரோமாபுரி

திரைகடலோடி திரவியம் தேடிய பண்டைய தமிழர்களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெருகின்றனர். யவனம் புட்பகம் சாவகம் சீனம் முதலான நாடுகளுடன் தமிழன் வணிக, கலை கலாசாரத் தொடர்பு கொண்டிருந்ததை சங்ககால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன. மிளகு முத்து மணிவகைகள் பருத்தி பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும் பட்டு மெந்துகிலும் நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டட வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது(செலவாணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.)

இந்த நாணயங்களில் காணப்படும் ரோம நாட்டு மன்னர்களின் விவரம்,

மன்னர்கள்
அகஸ்டஸ் சீசர் (கி.மு 29 - கி.பி 14)
டைபீரியஸ் சீசர் (கி.பி 14 - கி.பி 27)
நீரோ ட்ரூசஸ்(கி.மு 38 - கி.பி 9)
அந்தோனியா(ட்ரூசஸ் மனைவி)
ஜெர்மானிக்கஸ்
அக்ரிபின்னா(ஜெர்மானிக்ஸ் மனைவி)
காலிகுலா(கி.பி 37 - 41)
டைபிரியஸ் க்ளாடியஸ் (கி.பி 41 - 54)
நீரோ (கி.பி 54 - 68)
வெஸ்பாசியானஸ்(கி.பி 69 - கிபி 79)

நல்ல நிலையிலிருந்த நாணயங்கள் பெரும்பாலானவை தற்போது இங்கிலாந்து நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ளன. மீதமுள்ளவை சென்னை புதுக்கோட்டை அருங்காட்சியங்களில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

[தொகு] களப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590)

சங்ககாலத்தின் இறுதியில் தமிழக வரலாற்றில் ஒருவித இருள் சூழ்ந்து கொண்டது. தொன்றுதொட்டு தமிழகத்தில் ஆட்சி செலுத்திய சேர, சோழ, பாண்டியரை களப்பிரர் என்ற ஒரு கூட்டத்தினர் வென்று தங்களது ஆட்சியை நிலை நிறுத்தினர். தமிழகத்தில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. ஏறத்தாழ 300 ஆண்டுகள் தமிழகத்தை தடுமாறச் செய்த களப்பிரர் யார் என்பதுபற்றி அறிஞர்களிடையே வண்டிவண்டியாக கருத்து வேற்றுமை உண்டு.

ஆனால் அண்மைக்கால ஆய்வுக் கருத்துக்களின் படி இவர்கள் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. களப்பிரருடைய ஆட்சி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதோடல்லாமல் சமயம், சமுதாயம் கலாசாரத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களைத் தோற்றுவித்தது.

களப்பிரர் வைதீக மதங்களுக்கு எதிராகவும், பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட காரணமாகவும் தொன்றுதொட்டு வந்த பல சமயக் கோட்பாடுகள் பாதிக்கப்பட்டன. பாண்டிய நாட்டில் சமணத்தின் செல்வாக்கு அதிகரித்தது. களப்பிரரைப் பற்றியோ அவர்களது ஆட்சிபற்றியோ முழுமையான விவரங்கள் கிடைக்காத காரணத்தால் தமிழக வரலாற்றில் இக்காலத்தை ஒரு இருண்ட காலமாகவே கருதுகின்றனர்.

பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.

[தொகு] முதல் பாண்டியப் பேரரசு

கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை தமிழகப் பகுதி களப்பிரரின் ஆளுகையின் கீழ் இருந்தது. அவர்களிடமிருந்து பாண்டியன் கடுங்கோன் பாண்டி நாட்டைப் பகுதிகளைக் கைப்பற்றினான். பாண்டியன் நெடுஞ்சடையனின் வேள்விக்குடி செப்பேடு இதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. கடுங்கோன் கி.பி 590 முதல் 620 வரை ஆட்சி செய்தான். ஏறத்தாழ இதே காலத்தில் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு(கி.பி 575 - 600) தொண்டை மண்டலத்தில் களப்பிரரை வென்று அங்கு பல்லவர் ஆட்சியை ஏற்படுத்தினான். புதுக்கோட்டை பகுதி பாண்டியன் கடுங்கோனின் ஆளுகைக்குட்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக பாண்டிய மன்னர்கள், கோச்சடையன் ரணதீரன்(கி.பி 710 - 740), மாறன் சடையன்(கி.பி 765 - 815), ஸ்ரீமாற ஸ்ரீவல்லவன்(இவனது காலத்தில் சித்தன்ன வாசல் ஓவியங்கள் தீட்டப்பட்டன), வரகுணவர்மன்(கி.பி 862 - 880)சோழர்பல்லவர் கை ஓங்கியிருந்தது. சோழ பல்லவ படையினரிடம் இவன் திருப்புரம்பிய போரில் தோற்றுப் போனான். வரை ஆட்சி செய்தார்கள். தொடர்ச்சியாக பாண்டியர்களின் ஆளுகைக்குட்பட்டு புதுக்கோட்டை இருந்துவந்தது. வரகுணவர்மனின் ஆட்சியின் காலத்தில் மற்றும்

தொடர்ந்து பராந்தக வீர நாராயணனும்(கி.பி 880 - 900) மாறவர்மன் ராஜசிம்மனும்(கி.பி 900 - 920) ஆட்சி செய்தனர். இவர்களது காலத்தில் பாண்டிய அரசு மெல்ல மெல்ல சோழர்களின் ஆளுகைக்குட்பட்டது. முதல் பாண்டிய பேரரசின் கடைசி மன்னன் வீரபாண்டியன்(கி.பி 946 - 966) ஆவான், இவன் இரண்டாம் ஆதித்த சோழனால் முறியடிக்கப்பட்டான், முதலாம் பாண்டிய பேரரசு முடிவுக்கு வந்தது.

[தொகு] பல்லவர்

தொண்டை மண்டலத்தில் கி.பி 575 வாக்கில் பல்லவரின் ஆட்சியை நிறுவிய சிம்மவிஷ்ணு பரம்பரையினருக்கும் முதலாம் பாண்டியப் பேரரசை சேர்ந்த பாண்டியர்களுக்கும் அரசுரிமைக் குறித்த ஆதிக்கப்போர்கள் நடந்து கொண்டேயிருந்தன. கி.பி 7ம் நூற்றாண்டு முடிவில் காவிரிக் கரையின் வடக்குப் பகுதிவரை பல்லவப் பேரரசின் ஆளுகைக்குட்பட்டது. ஆனால் புதுக்கோட்டைப் பகுதியில் கி.பி 8ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர்களின் கல்வெட்டுக்கள் மட்டுமே கிடைக்கின்றன. இரண்டாம் நந்திவர்ம பல்லவனின்(கி.பி 710 - 765) மூன்றாவது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று குன்னாண்டவர்கோவிலிலும் மற்றொன்று ராசாளிப்பட்டியிலும் காணப்படுகிறது. இக்காலத்திலேயே பல்லவர் ஆட்சி புதுக்கோட்டையில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

தந்திவர்மன்(கி.பி 775 - 826), நிருபதுங்கவர்மன்(கி.பி 849 - 875) என பல்லவர் ஆட்சி பரவியிருந்ததையும் மேலும் பல்லவர் ஆட்சியிலும் பாண்டியர் ஆட்சியிலும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதி மாறிமாறியிருந்ததையும் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சி நிலையை நிர்ணயித்த போர்க்களங்கள் புதுக்கோட்டையில் நிறைய உண்டு என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.

[தொகு] முத்தரையர்

தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்தரையர் குறிப்பிடத்தக்கவர். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவராட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே. தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன.

முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டைபல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர். முத்தரையரின் தோற்றுவாய் பற்றி அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. முத்தரையர் களப்பிரர்களின் பகுதிகளில் கிளைக்குடியினர் என்று டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் களப்பிரர் என்ற சொல்லில் இருந்து முத்தரையர் என்ற சொல் எப்படிவந்தது என்று தெரியவில்லை. தமிழகத்தின் கலை, கலாச்சாரம், சமய சடங்குகள், பண்பாடு அனைத்தையும் நிலைகுலையச் செய்த களப்பிரரையும் கலக் காவலர்களாக காட்சியளிக்கும் முத்தரையரையும் தொடர்பு படுத்த முடியாது. முத்தரையர் என்பவர் பல்லவரே என வேங்கடசாமி நாட்டாரும், கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.

முத்தரையர் ஆரம்ப காலத்தில் பாண்டி நாட்டு முத்துக்குளிக்கும் துறைமுகப் பகுதிகளில் ஆட்சி செய்திருக்க வேண்டும். முத்து + அரையர் = முத்தரையர்(அரையர் என்றால் நாடாள்வோர் என்று பொருள். முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியரின் பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது. மேற்கண்ட கருத்துக்களை கூர்ந்து ஆராயும் பொழுது முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினராக இருந்திருக்க வ்ஏண்டும். இவர்கள் கொடும்பாளூர் வேளிருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களாகவும் இருக்க வேண்டும். முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினர் ஆயினும், இவர்கள் பல்லவர் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து பாண்டியரை எதிர்த்துப் போரிட்டிருக்கின்றனர்.

பிற்கால சோழர் பேரரசு

கொடும்பாளூர் வேளிர்

சாளுக்கிய சோழர்

இரண்டாவது பாண்டியப் பேரரசு

பாண்டிய நாட்டில் கலகம்

புதுக்கோட்டையில் மாலிக்காபூர்

பாண்டியப் பேரரசின் வீழ்ச்சி

விஜயநகர ஆட்சி



தமிழ்நாட்டு முத்திரை தமிழ்நாடு


தமிழ்நாடு தொடர்பான தலைப்புகள் | வரலாறு | அரசியல் | தமிழர்

தலைநகரம் சென்னை
மாவட்டங்கள் அரியலூர்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரி

காஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபுதுக்கோட்டைபெரம்பலூர்மதுரைஇராமநாதபுரம்விருதுநகர்விழுப்புரம்வேலூர்

முக்கிய நகரங்கள் அம்பத்தூர்ஆலந்தூர்ஆவடிஈரோடுகடலூர்காஞ்சிபுரம்கும்பகோணம்கோயம்புத்தூர்சென்னைமதுரைசேலம்தஞ்சாவூர்மயிலாடுதுறைதாம்பரம்திண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவொற்றியூர்தூத்துக்குடிநாகர்கோயில்நெய்வேலிபல்லாவரம்புளியங்குடிதென்காசி

சங்கரன்கோவில்அம்பாசமுத்திரம்பாளையங்கோட்டைநான்குனேரிவள்ளியூர்கடையநல்லூர்

இராஜபாளையம்வேலூர்
பா தொ
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது